search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெளியீட்டு விழா"

    • நூல் வெளியீட்டு விழா நடந்தது.
    • வந்தேறும் குடிகள் நூல் குறித்து மன்னர் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜன் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட மைய நூலகத்தில் நடந்த 56-வது தேசிய நூலக வார விழாவில் வந்தேறும் குடிகள் என்ற நூலை முன்னாள் அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் சுப்பையா வெளியிட சிவகங்கை நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் பெற்றுக் கொண்டார்.

    மாவட்ட நூல் இருப்பு சரிபார்ப்பு அலுவலர் வெள்ளைச்சாமி கண்ணன் தலைமை வகித்தார். நூலகர் முத்துக்குமார் வரவேற்றார். தமிழ்ச் செம்மல் பகிரத நாச்சியப்பன் வாசிப்பின் அவசியம் குறித்து பேசினார்.

    வந்தேறும் குடிகள் நூல் குறித்து மன்னர் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜன் பேசினார்.

    நூலகத் தன்னார்வ லர்கள் ரமேஷ் கண்ணன், தொழிலதிபர் பாண்டிவேல், நல்லாசிரியர் கண்ணப்பன், புலவர் மெய் ஆண்டவர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நூல் ஆசிரியர் ஈஸ்வரன் ஏற்புரை வழங்கினார். நூலகர் கனக ராஜன் நன்றி கூறினார்.

    விழாவில் நூலகர்கள், நூலக பணியாளர்கள் மற்றும் வாசகர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • நூல்கள் வெளியீட்டு விழா நடந்தது.
    • 200-க்கும் மேற்பட்ட தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மொழிஞாயிறு தேவநேயப் பாவணாரின் பாவாணரியல் நூல்கள் வெளியீட்டு விழா மதுரை அண்ணாநகர் அருகே உள்ள அவரது மணிமண்ட பத்தில் நடை பெற்றது. உலக தமிழ் கழக தலைவர் நிலவழகன் தலை மை வகித் தார். பொது செயலாளர் இளந்திரையன் வரவேற் றார்.

    நெறியாளர் கதிர் முத்தை யன் கொடியேற்றினார். இணத்தலைவர் தமிழ் வாணன், இணை பொதுச் செயலாளர் இளங்கோவன், துணைத் தலைவர் சக்கர பாணி, தலைமையக செய லாளர் கீரைத்தமிழன், கணக் காய்வாளர் இளஞ் சேட் சென்னி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்-இந்தோ ஐரோப் பிய வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதி திட்ட இயக்குநர் பூங்குன்றன் பாவாணரியல் நூல்களை வெளியிட முதல் பிரதியை சிறப்பு நிலை பதிப்பாசிரியர் ஆல்துரை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து பாவேந்தர் பாரதிதாசன் பேரவை செந்திலை கவுதமன் சிறப்பு ரையாற்றினார்.

    உலக தமிழர் கழக தலைமையக செயலாளர் மன்னர் மன்னன், மதுரை மாவட்ட அமைப்பாளர் சீவா பாவா ணர் (எ)சோழன்( பாவாணர் பேரன்) ஆகியோர் நிகழ்ச்சி யை ஒருங்கிணைத்தனர். விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

    • விருதுகள் வழங்கப்பட்டது
    • ஏராளமாேனார் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வி.ஜெ.ஆர் திருமண மண்டபத்தில் ஏ.பி.ஜே அறக்கட்டளை சார்பாக கலாம் கனவு விருதுகள் 2022 என்ற தலைப்பில் விருதுகள் வழங்கப்பட்டது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறப்பாக சமூக பணி செய்த ரோட்டரி மாவட்ட தலைவர் பரத்கு மாருக்கு சிறந்த சமூக சேவைக்கான விருதினை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.

    மேலும் அறக்கட்டளை நிகழ்வுகள் கொண்ட 2023 புத்தகத்தை நவீன் முரளிதார் மற்றும் ஆனந்த் பாண்டி வெளியிட அறக்கட்டளை தலைவர் கோபிநாத் பெற்றுக்கொண்டர்.

    மேலும் இந்த விழாவில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    • “தமிழ்ச்சோலை” புத்தக வெளியீட்டு விழா நடந்தது.
    • பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமையில் நடந்தது.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையின் சார்பில் "தமிழ்ச்சோலை" புத்தக வெளியீட்டுவிழா பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமையில் நடந்தது.

    இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல் பிரதியை சிறப்பு விருந்தினரான சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம். கல்லூரியின் ஓய்வு பெற்ற தமிழ்த்துறைத் தலைவர் தனபால் பெற்றுக் கொண்டு பேசினார். மாணவர்களிடையே கற்றல் ஈடுபாட்டை பெருக்கவும், படைப்பாற்றலை வளர்க்கவும், சிறந்த படைப்பாளிகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டதே "தமிழ்ச்சோலை" இதழ் ஆகும்.

    விழாவில் தமிழ்த்துறைத் தலைவர் வாகேசுவரி வரவேற்றார். கல்லூரியின் கல்விசார் இயக்குநர் கோபால்சாமி, முதல்வர் சுந்தரராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். உதவிப்பேராசிரியை சித்ராதேவி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். உதவிப் பேராசிரியர்ரமேஷ் நன்றி கூறினார். உதவிப்பேராசிரியைகள் முத்துமாரி,சுதந்திராதேவி, ஜோதி ஆகியோரது முன்னிலையில் தமிழ்த்துறை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    ×